Saturday, 2 May 2015

kaNNeer pookkaL (Flowers of tears)

                                      
                                      


                                                   கண்ணீர்ப் பூக்கள்  (சிறுகதை )

         ( 1985ம் ஆண்டு) அகில இந்திய வானொலிக்காக  எழுதி வழங்கியவர்:

                                                            கௌரி கிருபாநிதி.
                                                                            -------

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை நோக்கி என் கார் சென்று கொண்டிருந்தது.  மெல்லியதாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது.  வழியில் கந்தசாமிச் செட்டியார் மகன் குமரன் கை காட்டினான்.  வண்டியை நிறுத்தினேன்.

"பாண்டி போறீங்களா ஸார்?"

"ஆமாம்.  ஏறிக்கோ..."

வழி நெடுகப் பேசிக்கொண்டே வந்தான்.  அவன் பேச்சில் தொண்ணூறு சதவிகிதம்  தன் அப்பாவைப் பற்றிய குறைதான்.

"ஒரு வளர்ந்த பிள்ளையாவா என்னை மதிக்கறாரு?  'எங்கே போனே?  என்ன செஞ்சே?  எடுத்துகிட்டு போன பணத்துக்கு என்ன கணக்கு?',  இப்படி ஒவ்வொண்ணுலேயும் தலையிடறாரு.  நீங்களும் ஒரு அப்பாதான்,  ஷ்யாமுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கீங்க?  அவனை நம்பி பிஸினஸையே ஒப்படைச்சுட்டு,  நீங்க க்ருஷ்ணா, ராமான்னு ஒதுங்கியிருக்கீங்க.  போற வழிக்கு புண்ணியம் தேடிக்கணும்னு உங்களுக்கு தோணுது.  அவருக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்தாதானே?"...

"அந்த காலத்து மனுஷர்.  அப்படித்தான் இருப்பாரு.  கேள்வி கேட்டா என்னப்பா?  பதில் சொல்லிட்டுப் போயேன்.  அவர் என்ன மூணாம் மனுஷரா?  உங்க அப்பாதானே?"...

"பசங்க 'ஸைக்காலஜி'யைப் புரிஞ்சுகிட்டு, அவங்களை 'அடல்ட்' மாதிரி நடத்தறதுக்குப் பெரியவங்களுக்குத் தெரியணும்.. எது நல்லது, எது கெட்டதுன்னு எங்களுக்குத் தெரியாதா?  தொணதொணன்னு இப்படியா உயிரை எடுப்பாங்க?  உங்களை மாதிரி 'ஃப்ரெண்டை'ப் பார்த்துக் கூட அவருக்கு புத்தி வரலியே?  ஒரு பிள்ளையை எப்படி நடத்தணும்னு அவருக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க ஸார்..."

நகரின் மையப் பகுதியில் இருந்த பெரிய துணிக் கடையின் முன்பு காரை நிறுத்தினேன்.  'பில் கௌண்டரில்' இருந்த செட்டியார்,  என்னை பார்த்து விட்டு எழுந்து வந்தார்.  எனக்கு நன்றி கூறி விட்டு, கௌண்டரில் அமரச் சென்றான் குமரன்.  இடையில் தன் தந்தையைப் பார்த்த அவன் பார்வையில், ஆயிரம் வாட்ஸ் உஷ்ணம் - ஜன்ம விரோதியின் கோபம் - தெரிந்தது.  செட்டியார் காரின் அருகில் வந்தார்.

"வாங்க. ஒரு 'கூல் ட்ரிங்க்ஸ்' சாப்பிட்டுட்டு போகலாம்..."

"வேணாம் செட்டியார்..  நல்லவேளை தூறல் விட்டுருக்கு.  நான் கோயில், ஆசிரமம் எல்லாத்துக்கும் போகணும்.  ஒரு அஞ்சு நிமிஷம் இப்படிக் காரிலே உட்காருங்க.  உங்களோட கொஞ்சம் பேசணும்"...

"என்னங்க விஷயம்?"  என்று கேட்டவாறே, செட்டியார் என்னருகில் அமர்ந்தார்.

"ஒரு விஷயம், சொன்னா தப்பா நினைக்காதீங்க செட்டியார்.  உங்க பிள்ளையை கொஞ்சம் விட்டுப் பிடிங்க.  ரொம்பக் கெடுபிடியா இருக்காதீங்க..."

"ஏன்?  என்னைப் பத்திக் குறைப் பட்டுக்கிட்டானா?  கெடக்கிறான் விடுங்க வெத்துப்  பய..."  என்றார்.

"அதுக்கில்லே.  நாம இப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதிக்கறது நம்ம பிள்ளைங்களுக்காகத்தானே?  இவ்வளவும் செஞ்சுட்டு, அவங்க வெறுப்பையும் நாம ஏன் சம்பாதிச்சுக்கணும்?"

"அந்தப் பயலைப் பத்தி உங்களுக்குத் தெரியாதுங்க.  எங்க தகப்பனார் நின்னுக்கிட்டிருந்தா, நாங்க உட்கார மாட்டோம்.  திமிர் பிடிச்ச பய, என் எதிரிலேயே சிகரெட் பிடிக்கறான்.  தண்ணி வேறே அடிக்கறானாம்.  நேர்மை இருக்கற இடத்துலேதானே, பணிவும் இருக்கும்?  இவங்ககிட்டே எல்லாம் எப்படிங்க இருக்கும்?  லகான் எங்கிட்டே இருக்கறப்பவே, இவன் இந்த ஆட்டம் ஆடறான்.. என் உசிரு இருக்கற வரைக்கும்,  நான் கேள்வி கேட்டுகிட்டுத்தான் இருப்பேன்.  அப்புறமா அவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.  இந்த மாதிரி பசங்களை பிச்சையெடுக்க வைச்சாதான், புத்தி வரும்..."  என்றார்.

அடேயப்பா!  கோபத்திலும், பிடிவாதத்திலும் அப்பாவும், பிள்ளையும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.  தன் பிள்ளை கஷ்டப் படுவதைப் பார்த்து, ஒரு தகப்பனால் சந்தோஷப்பட முடியுமா?  அப்படி சந்தோஷப் படுபவன், ஒரு தந்தையாக, மனிதனாக இருக்க முடியுமா?  தவறு செய்யும் மகனைப் பக்குவமாகத் திருத்துவதை விட்டு விட்டு, இது என்ன விரோத பாவம்?  அறியாமையில் கிடந்து உழலும் செட்டியாரைப் பார்த்தால், பாவமாக இருக்கிறது.  ஒரே மகனின் அன்பை, இப்படி முழுவதுமாக இழந்து விட்டாரே!

என் பிள்ளை ஷ்யாமின் சிரித்த முகம் என் நினைவுக்கு வருகிறது.

பத்து வயதில், தன் தாயை இழந்து விட்டான் ஷ்யாம்.  தொழிலதிபரான எனக்கு, என் பிள்ளையுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை.  சிறு வயதில் வறுமையில் வாடிய நான், 'நான் பட்ட துன்பங்களின் நிழல் கூட, என் மகன் மேல் படிந்து விடக் கூடாது; அவன் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும்' என விரும்பினேன்.  மறுமணத்தைப் பற்றி, எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.  என் தொழிலின் வளர்ச்சியில், என்னை கரைத்துக் கொண்டேன்.  உடலும், மனமும் களைத்து, உறக்கத்தில் என்னை உடனே ஆழ்த்தும் வண்ணம், உழைத்தேன்.

வீட்டு வேலைகளுக்கும், ஷ்யாமை கவனித்துக் கொள்ளவும், வீட்டில் நிறைய வேலைக்காரர்கள் இருந்தனர்.  தனிமை என் மகனை வாட்டக் கூடாதென்று, அவன் விரும்பியபோதெல்லாம், நண்பர்களை வரவழைத்துக் கொள்ளும் உரிமையை அவனுக்கு அளித்தேன்.  அவன் விரும்பியதெல்லாம், அவனுக்கு உடனடியாகக் கிடைக்கச் செய்தேன்.

என் மகன் எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை.  படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்த அவன், எம்.காம். முடித்ததும், என் பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்து விட்டேன்.  கொஞ்ச காலம் அவனுக்குத் தொழில் விஷயங்களில், ஆலோசனைகள் வழங்கி வந்தேன்.  ஒரு நாள் ஷ்யாம் சொன்னான்.

"அப்பா!  நீங்க வேண்டிய மட்டும் உழைச்சுட்டீங்க.  இனிமே உங்களுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கறது என்னோட 'ட்யூடி'.  உங்களுக்குப் பிடிச்ச மாதிரி உங்க 'லைஃபை ஸ்பெண்ட்' பண்ணுங்க.  எதைப் பத்தியும் இனிமே கவலைப் படாதீங்க.  எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கறேன்..."

என் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட மகனை பெருமிதத்துடன் பார்த்தேன்..
அவனை நான் என்றுமே தோழனாகத்தான் நடத்தியிருக்கிறேன்.

கட்டுமானப் பொருள்களின் உற்பத்தி, விற்பனையில் தொடங்கப் பட்ட என் தொழில், பெரிய கட்டிடங்களின் 'காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட் பிஸினெஸ்' என்று வளர்ந்து கொண்டே வந்தது.  தொழில் நிர்வாகத்திலும், என் மகன் எனக்கு ஏமாற்றமளிக்க வில்லை.  வேறு சில ஊர்களிலும், எங்கள் அலுவலகத்தின் கிளைகள் திறக்கப் பட்டன.  தொழிலில் இலாபம்
அதிகரித்தது.

ஒரு நாள், என்னிடம் பல வருடங்கள் வேலை பார்த்த 'பொன்னம்பலம்' என்பவரிடமிருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது.  "நாணயமாக வேலை செய்து வந்த நான், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டு, வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளேன்.  தாங்கள் கருணை கூர்ந்து, எனக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தார்.  ஷ்யாமிடம் இது பற்றி விசாரித்தேன்.

"சிமெண்ட் ஸப்ளைக்காக டெண்டர் கேட்டிருந்தோம்.  லோயஸ்ட் டெண்டர் சம்பந்தமான ஃபைல் காணாமப் போயிடுச்சுன்னு சொல்றார்.  இவர் லஞ்சம் வாங்கிக்கிட்டு, இன்னொரு கம்பெனியோட டெண்டரை 'அக்ஸெப்ட்' பண்ணிக்கிட்டார்..."

"யாரு? பொன்னம்பலமா இப்படி செஞ்சார்?"

"ஆமாம்ப்பா.  பல வருஷமா வேலை செய்யறாரேன்னு அவரை நம்பி, ரொம்ப பொறுப்பான வேலையை கொடுத்தோம்.  மனுஷன் முன்னே மாதிரி இல்லே.  ரொம்ப மாறிப் போயிட்டார்ப்பா.  அவருக்கு என்ன பணக் கஷ்டமோ?  ஆனா, அதுக்காகப் பரிதாபப் பட்டு, நாம நஷ்டப் பட முடியாதே!..."

இன்னும் சில நாட்கள் கழித்து, பொன்னம்பலத்திடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது.  "யாரோ பெரிய மனிதர் சிபாரிசு பெற்ற ஒரு சின்னப் பையனுக்கு, என் வேலையைக் கொடுத்து விட்டார்கள்.  எனக்குக் கல்யாணத்துக்குப் பெண் இருக்கிறாள்.  நான் ரொம்ப கஷ்டப் படுகிறேன்..."  என்று எழுதியிருந்தார்.

''அவரோட ஏமாத்து வேலை அம்பலமாயிடுச்சேன்னு ஆத்திரம்ப்பா அவருக்கு.  அவருக்குச் சேர வேண்டியதெல்லாம் 'ஃபுல்லா ஸெட்டில்' பண்ணிட்டேன்.  அதைத் தவிர, போனாப் போகுதுன்னு, அவர் பொண்ணு கல்யாணத்துக்காகவும், பத்தாயிரத்துக்கு ஒரு 'செக்' அனுப்பியிருக்கேன்.." என்றான் ஷ்யாம்.

பொன்னம்பலம் இப்படி மாறி விட்டதை எண்ணிக் கசப்பாக இருந்தது எனக்கு.  பாவம், ஷ்யாம் எத்தனை பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது?

பத்து நாட்களாக ஷ்யாமின் காரைக் காணோம்.  டிரைவரும் வரவில்லை.  ஷ்யாம் சொன்னான்,

"கார் ரிப்பேர்.  'காரேஜ்'லே இருக்கு.  டிரைவரோட அப்பாவுக்கு,'ஹார்ட்'லே
'மேஜர் ஆபரேஷன்' செய்யணுமாம்.  லீவ் வேணும், செலவுக்குப் பணம் வேணும்னு அழுதான்.  பாவமா இருந்திச்சு.  மூணு மாசம் லீவும், இருபதாயிரம் பணமும் கொடுத்தனுப்பினேன்.  இன்னும் சில பேரும் அவனுக்கு உதவியிருக்காங்க..."

"என் பிள்ளையிடம் 'பிஸினஸ்' மூளை மாத்திரம் இல்லை, கருணை உள்ளமும் இருக்கிறது.  இவ்வளவு வளர்ந்த பின்னும், என்னிடம் அவன் காட்டும் மரியாதையில் குறைவில்லை.  நாள் கிழமைகளில் என்னை வணங்கத் தவறுவதில்லை அவன்.  ஒரு நல்ல பெண் அவனுக்கு மனைவியாக அமைந்து விட்டால், எனக்கு வேண்டியது வேறெதுவுமில்லை.  என் வாழ்க்கை பரிபூரணமாகி விடும்"..கர்வம் கலந்த மகிழ்ச்சி என் மனத்தில் நிறைந்திருந்தது.

மணக்குள விநாயகர் கோயிலருகில், காரை நிறுத்தினேன்.  உள்ளே பிரதட்சிணம் செய்து விட்டு வரும் போது, சன்னிதி எதிரில் கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்த பிரகாசத்தைப் பார்த்தேன்.

பிரகாசம் என் ஆன்மீக நண்பர்.  அவர் குடும்பம், பொருளாதார நிலை, எது பற்றியும் எனக்குத் தெரியாது.  எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஒரு பக்தர்; தமிழறிஞர்; தெய்வீக நூல்களைக் கரைத்துக் குடித்தவர், இவ்வளவுதான்.

கோயில்களிலும், அரவிந்தர் ஆசிரமத்திலும் பல முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம்.  எங்கள் பேச்சு, இந்த ஆன்மீக வட்டத்தைக் கடந்ததில்லை.

தரிசனம் முடித்து வெளியே வந்தோம்.  கோயிலிலிருந்து ஆசிரமத்துக்கு நடந்து சென்று விட்டுத் திரும்புவது என் வழக்கம்.  பேசிக் கொண்டே நடந்தோம்.  பிரகாசத்தின் முகத்தில் கப்பியிருந்த சோகம், என்னை அது பற்றி விசாரிக்கச் செய்தது.  முதன்முறையாகத் தன் குடும்பம் பற்றிச் சொன்னார்.  தன் பிள்ளையைப் பற்றிக் கூறும் போது கதறி விட்டார்.

"நான் எப்படிங்க சந்தோஷமா இருக்க முடியும்?  இன்னிக்கு என் பிள்ளை ஜெயில்லே இருக்குறான்.  ஏதாவது சுதந்திரப் போராட்டத்துக்காக போயிருந்தான்னா, பெருமைப் பட்டுக்கலாம்.  காரை ஏத்தி, பச்சைப் புள்ளையைக் கொன்னப் பழியை சுமந்துகிட்டு இல்லே போயிருக்கான்?"

"என்ன சொல்றீங்க?"

"படிப்பு வரலேன்னு, அவனை டிரைவர் வேலைக்கு அனுப்பினேன்.  அவனோட முதலாளி தான் செஞ்ச தப்பை, இவன் தலையிலே சுமத்தி, ஜெயிலுக்கு அனுப்பிட்டான்.  குள்ள நரித்தனமா எப்படியெல்லாம் பேசி, என் பிள்ளையை ஏமாத்தியிருக்கான் தெரியுமா?  கண் துடைப்புக்கு இருபதாயிரம் பணம் வேறே கொடுத்திருக்கான்.   இத்தனை நாள் நாங்க கட்டிக் காத்த குடும்ப கௌரவம், மானம், மரியாதை...இதெல்லாம் இப்போ காத்துலே போயிடுச்சே, அதையெல்லாம் இந்தப் பணமா திருப்பிக் கொடுக்கப் போகுது?..."

"டிரைவர், இருபதாயிரம்..." சொரேலென்றது எனக்கு.

"ஜெயில்லேயிருந்து திரும்பி வந்ததும், திரும்பவும் வேலைக்குச் சேர்த்துக்கறானாம்.  ஏன்?  இன்னும் ஏதாவது கொலையே செஞ்சுட்டு, என் பிள்ளையை மாட்டி விட்டு, தூக்குத் தண்டனை வாங்கித் தரவா?  விபத்து நடந்த அன்னிக்கு என் பிள்ளை லீவிலே, வீட்டிலேதான் இருந்தான்.  இதை நிரூபிக்க எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாம போயிடுச்சு.  என் அருமைப் பிள்ளை இப்போ ஜெயில்லே...இதை நெனச்சு, நெனச்சு நெஞ்சு ரணமா
ஆயிடுச்சு..."

என் நெஞ்சையும் யாரோ வாள் கொண்டு அறுக்கிறார்கள்.  நிதானப் படுத்திக் கொண்டு விவரங்களை விசாரித்தேன்.  நிச்சயமாகத் தெரிந்து விட்டது, இவர் சோகத்துக்குக் காரணம் என் மகன்தான்.

ஆசிரமத்தை அடைந்து விட்டோம்.  தியான மண்டபத்தில் தியானம் செய்ய அமர்ந்தோம்.  மனம் ஒன்ற வில்லை. எதிரே அமர்ந்திருந்த பிரகாசத்தின் கண்களிலிருந்து, கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.  உணர்ச்சிக் குமுறல்கள், என் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

"எப்பேர்ப் பட்ட வஞ்சகம்?  என்ன நடிப்பு?  என்னையே முட்டாளாகி விட்டானே! அவன் சிரிப்பு, போலி மரியாதை, உண்மையெனத் தோன்றும்படி அவன் அவிழ்த்து விடும் கட்டுக் கதைகள்...பொன்னம்பலத்தின் கண்ணீர்க் கடிதங்கள் உண்மையானவையோ?  இவன் செய்த எந்தத் தவற்றை மூடி மறைக்க, அவன் பொன்னம்பலத்தை வேலை நீக்கம் செய்தானோ?  நேர்மையின் அஸ்திவாரத்தின் மேல், நான் கட்டிய தொழிற் கோட்டை, இன்று அதர்மத்தின் துணையுடன் வளர்ந்து கொண்டிருக்கிறதா?

அன்றொரு நாள், கண்ணீரோடு வாசலில் வந்து கெஞ்சிய இளம் பெண்ணை, கூர்க்காவை விட்டுத் துரத்தினானே, அதற்குப் பின்னால் என்ன கண்ணீர்க் கதை இருக்கிறதோ?

நான் எங்கு தவறு செய்தேன்?  பெரும்பாலும் அவனைச் சூழ்ந்து நின்ற நண்பர்களின் கூட்டத்தில், ஒவ்வொருவனும் எப்படிப் பட்டவன் என்று நான் அறிந்து கொண்டிருக்க வேண்டுமோ?  அவன் பெற்ற அறிவை, குறுக்கு வழியில் அவன் உபயோகித்துக் கொண்டிருப்பதற்கு, யார் காரணம்?

வாழ்வின் சூத்திரங்கள், எல்லோருக்கும் ஒரே விதமாகப் பொருந்துவதில்லை.  அனைவருக்கும் சரியான விடையை அளிக்காமல், அவை மனிதருக்கு மனிதர், முரண்பட்டு நிற்கின்றன.  ஒவ்வொன்றிலும் தலையிடுவது தப்பென்றால், என்னைப் போல் ஒரேயடியாக ஒதுங்கி விட்டதும் தப்போ?  காலம் கடந்த ஞானம்... இப்போது நான் கௌரவமாக ஒதுக்கப் பட்டு விட்டதை உணர்கிறேன்.  இனி நானே விரும்பினாலும், விட்ட இடத்தைத் திரும்பப் பிடிக்க முடியுமா?  அவன் பவ்ய முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு, உண்மை முகத்துடன் என்னை எதிர்த்தால், நான் என்ன செய்வேன்?  எது சரி? எது தவறு?  ஒன்றும் புரியவில்லை.  'என் வாழ்க்கை  வெற்றிகரமானது' என்று எண்ணியிருந்தேன்.  'நானும் ஒரு விதத்தில் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறேன்' என்று மட்டும் புரிகிறது.

பிரகாசத்தின் குடும்பத்துக்கு இழைக்கப் பட்ட  கொடுமைக்குப் பரிகாரம் செய்யும் திறன் எனக்கு வருமா?  இல்லை, நான் யாரென்பதை அவரிடம் வெளிப் படுத்தி, அவர் சாபங்களை அள்ளி வீசினால், அதை ஏற்கும் உரமாவது என் நெஞ்சுக்கு உண்டா?

'நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி..."  நான் படித்த பாரதியாரின் பாடல் வரிகள் என்னைப் பளீரென்று அறைகின்றன.

இல்லை, இன்று என்னால் முடியவில்லை.  ஆனால், என்னை திடப் படுத்திக் கொண்டு, நான் இதற்கெல்லாம் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.  கோழையாகவே ஒரு நாள் மண்ணில் புதைந்து போகக் கூடாது... கடவுளே! எனக்கு வலிமையைக் கொடு..எனக்கு வழி காட்டு..."

அரவிந்தரின் சமாதியை வலம் வந்தோம்.  கண்ணீர்க் கரையிட்டிருந்த முகத்துடன் நின்றிருந்த பிரகாசத்தை, நேருக்கு நேர் காண முடியாமல், என் கண்கள் கூசின.

இந்த சமயத்தில், என் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு, எனக்கு ஆறுதல் கூற, ஆலோசனை வழங்க, எனக்குத் தாய், தந்தையும் இல்லை, தாரமும் இல்லை.  அனைவரையும் இழந்து விட்ட நான், அந்த இழப்பு என் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை, இப்போது பரிபூரணமாக உணர்கிறேன்.  இவ்வுலக பந்தங்களிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு, ஆன்மீகத்தில் கரைந்து விட்டால், அமைதியை அடையலாம் என்று நினைத்தேன்.  அந்த அமைதி, கானல் நீர் போல் நான் நெருங்க நெருங்க, என்னை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறது.

என் மனைவி உயிருடன் இருந்திருந்தால், நான் இவ்விதம் ஒதுங்க அனுமதித்திருப்பாளா?  பிள்ளையின் நடவடிக்கைகளை, அவன் நண்பர்களை, அவன் மனத்தின் ஆழத்தைப் பற்றி, அறியாமல் இருந்திருப்பாளா?  எனக்கும், அவனுக்குமிடையில், ஒரு பாலமாக இருந்து செயல் பட்டிருக்க மாட்டாளா?  அறிவிற் சிறந்த என் மகனின் உள்ளத்தில், மனிதத்தன்மையையும், ஒழுக்கத்தையும் ஓரளவுக்காவது விதைத்திருக்க மாட்டாளா?

என் மகனை விட்டு, மனத்தளவில் நான் விலக ஆரம்பித்ததும், திடீரென்று என் தனிமை என்னைத் தீவிரமாகத் தாக்குகிறது.  மனைவியைப் பற்றி நினைத்ததும், என் கண்கள் குளமாகின்றன.

"எனக்குத் துணையாய், தோழியாய், தாயாய், மந்திரியாய் ...இருந்திருக்க
வேண்டிய நீ, என்னை அநாதையாக்கி விட்டு, ஏன் மறைந்தாய்?"

அரவிந்தரின் சமாதியில் மண்டியிட்டுத் தலை வைத்து வணங்கும் போது, என் கண்ணீர்ப் பூக்கள் சமாதியை அர்ச்சிக்கின்றன.

எதிரே அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும் அழகான மலர்க் கொத்துகள், அமைதியிழந்த என் உள்ளத்துக்கு, சற்றே ஆறுதல் அளிக்கின்றன.


                                                      ----------------------------------

Hello friends, Read the story? 
I dedicate this story to Sri Aravindhar and the Divine Mother of Pondicherry.

Bhgawad Gita says, 'Parivarthan sansaar kaa niyam hey'
('maatrangaL ulagin niyadhi').  Our life style, habits, social status, amenities, comforts, expectations, requirements, desires...all are changing.  Do they help bringing happiness, solace and contentment to the human mind?

 Childhood is a blessing, mostly...(there are exceptions).  Adulthood has always been a challenging one.  Which is right and which is wrong?  Our mind gets confused at times.  There is no common formula which is applicable to each and everyone.  Wisdom, will-power, hard work, virtues and God's blessings...if we surrender ourselves at the lotus feet of  God, He will pave our way..we'll get some mental solace.  

Great people, poets and elders have emphasized this point in various ways.  Thirukkural which has got world-wide recognition says, "piravip perunkadal neendhuvar, neendhaar iraivanadi sEraadhaar" (Those who seek shelter at the feet of God will easily cross the ocean of this 'janma', others will find it very difficult).
Gopalakrishna Bharathiyar says, "Bhavasaagaram karaiyEralaam"
(By worshipping the feet of God).  So many such examples are there.

More things are wrought by prayer than this world dreams of.  The paths and the Divine Guides we choose may be different, but the destination is one and the same.  

கவிஞர் கண்ணதாசனின் நயமிகு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன,

"பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்,
 பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுப் போல் படுத்திருந்தேன்,
 அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா,
 உன்னுடன் ஆடி வர உள்ளமே பாடுதடா...

  கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

  (சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ}

                                           மீண்டும் சந்திப்போம்...








   

   





Wednesday, 19 November 2014

கண்ணுக்குத் தெரியாத முதலீடு (INVISIBLE INVESTMENT)

நண்பர்களே!  உங்க தோழி சிக்கூ உங்களை சந்திக்க திரும்ப வந்திருக்கேன்.  நாம சந்திச்சு ரொம்ப நாளாச்சு இல்லே?  ஒரு நல்ல இடத்துலே, புதுசா ஒரு வீடு, ஸாரி, கூடு கட்டியிருக்கேன்.  அதான் ரொம்ப 'பிஸி'.  நானும் எறும்பு  மாதிரி சுறுசுறுப்புதான்.  பாருங்க, இந்த எறும்புகள், மழைக்காலத்துக்கு சாப்பாட்டை எப்படி சேர்த்து வைக்குது?  மனுஷங்களும் சம்பாதிக்கறாங்க, சேர்க்கறாங்க, சொத்து வாங்கறாங்க, எதுலேயாவது முதலீடு செய்யறாங்க.  நிறைய 'பணம்' சம்பாதிச்சாதான் முதலீடு செய்ய முடியுமா?  தேவையில்லே.  அதுக்கு வேறே வழிகளும் இருக்கு.  பெரியவங்க சொல்லியிருக்காங்க, "வெறும் கை என்பது மூடத்தனம், பத்து விரல்களும் மூலதனம்..."

பல வருஷங்களுக்கு முன்னாலே, என் தோழி குக்கூ, அதான் கௌரி, இது சம்பந்தமா ஒரு கதை எழுதி, ரேடியோலே வாசிச்சாங்க.  அதுலே "கண்ணுக்குத் தெரியாத முதலீடு"ன்னு எதை சொல்றாங்க?  படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கலாமா?
               
                       

                    கண்ணுக்குத் தெரியாத முதலீடு
                         (INVISIBLE INVESTMENT}
          (WRITTEN AND PRESENTED THRO’ AIR BY MRS. GOWRI KRUPANIDHI)
                                ……………………
     கிழவியின் கண்களில் கண்ணீர் கரை கட்டியிருந்தது.  குருவி போல் சற்றே திறந்திருந்த வாயில் புன்சிரிப்பு.
“பட்டுப் பாவாடை, சட்டை, கழுத்தில் காசு மாலையும், முல்லையரும்பு வைத்து தைத்த சடையுமாக, சிறுமி கமலம் குதித்து குதித்து ஆடுகிறாள்.  காவிரி ஆற்று மணலில், கால்கள் புதையப் புதைய ஓடுகிறாள்…”

     அரைகுறையாக மூடிய கண்களுக்குள்ளே தெரிந்த இனிமையான பழைய காட்சிகள், திடீரென்று கலைகின்றன.  கிழவியின் கண், மூக்கு, உதடு என்று மாறி மாறி ஓர் ஈ வந்து உட்கார்கிறது.  அதை விரட்டப் பார்த்து, முடியாமல், கிழவி முகத்தை மூடிக் கொள்கிறாள்.

     கையில் பால் டம்ளருடன் வராந்தாவுக்கு வரும் ரத்னா, கிழவியின் தலையைத் தாங்கி உட்கார வைத்து, பாலைத் தருகிறாள்.  மீண்டும் படுக்க வைத்து விட்டு, அருகிலிருக்கும் ‘பெட் பானை’ சுத்தம் செய்ய எடுத்துச் செல்கிறாள்.  இரக்கம் ததும்பும் விழிகளுடன் மருமகளையே கவனித்துக் கொண்டிருக்கும் கிழவியின் கண்களில் கண்ணீர்.  மேசை விசிறியை கிழவியின் முகத்துக்கு நேராக திருப்பி வைத்துவிட்டு, ரத்னா செல்கிறாள்.

        இரண்டு வருடங்கள் முன்பு வரை அவள் கமலம்மா.  அந்த வீடு முழுக்க வளைய வந்து, நடுங்கும் விரல்களால், நூறு வேலைகள் செய்தவள்.  யார் எத்தனை மணிக்கு வந்தாலும் முகம் சுளிக்காமல், அன்புடன் உணவு பரிமாறியவள்.  பேரன், பேத்திக்கு சலிக்காமல் கதை சொன்னவள்.  ‘உதவி’ என்று யார் கேட்டாலும், சளைக்காமல் செய்தவள்.  மருமகளை மகளாக பாவித்தவள்.

     கமலம்மா நோய்ப் படுக்கையில் விழுந்து, கால்களும் பலமற்றுப் போய், தொய்ந்து விட்ட நிலையில், தன் காரியங்களுக்கே அவள் மற்றவரை எதிர்பார்க்க வேண்டி வந்தது.  இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைந்து விட்டபின், ஒரு நர்ஸ் மூலம் அவளுக்கு ஒரு பையுடன் இணைக்கப்பட்ட ‘ட்யூப்’ பொருத்தப்பட்டது.

     அந்த வீட்டின் முன்னால் ஒரு வராந்தா, அடுத்து ஒரு சிறிய ஹால், பின் சமையலறை, அவ்வளவுதான்.  அந்த ஹாலில்தான் அனைவரும் படுக்க வேண்டும்.

     ஒரு நாள் அவள் மகன் மாதவன் மனைவியிடம் கத்தினான், “உழைச்சு சலிச்சு வீட்டுக்கு வந்தா, நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடியலே, ராத்திரி தூங்க முடியலே..நாத்தம் சகிக்கலே..”
ரத்னா அவனிடம் மன்றாடிப் பார்த்துத் தோற்றுப்போனாள். கமலம்மாவின் உறைவிடம் வராந்தாவுக்கு மாற்றப்பட்டது.  சிலரைத்தவிர, எல்லோருக்கும் அவள் ‘கிழவி’ அல்லது கிழமானாள்.

     வராந்தாவில் கிழவிக்கு அருகில் ஒரு ‘டேபிள் ஃபான்’. ஒரு சிறிய பக்கெட் தண்ணீர், குவளை, குடிக்கத் தண்ணீர், ‘பெட் பான்’, ஒரு புடவை ‘ஸ்க்ரீன்’.

     ஆரம்பத்தில் ஒரு நிமிடம் பேருக்கு நின்று, அம்மாவைப் பார்த்துவிட்டுச் சென்ற மாதவன், நாளாக ஆக, உள்ளே நுழையும்போதே, ஸ்க்ரீனை இழுத்து விட்டு, அம்மாவைப் பார்ப்பதையே தவிர்த்து உள்ளே போக ஆரம்பித்தான்.  அவன் உள்ளே சென்றதும் ரத்னா வெளியே வந்து, ஸ்க்ரீனை விலக்கி விடுவாள். கிழவி கண்களில் நன்றி பொங்கும்.  எதிரே வாசல், ‘க்ரில்’ ஜன்னல் வழியாகத் தெரியும் பறவைகள், வானம், விளையாடும் குழந்தைகள், இவை கிழவியின் தனிமைக்கு மருந்து.  வேடிக்கை பார்க்க சௌகரியமாக ரத்னா அவளைச் சற்று நகர்த்தி உட்கார வைப்பாள்.  மற்ற நேரங்களில் படுக்கைதான், அரைக்கண்கள் மூடிய நிலையில், கண்களில் நீருடன், சமயங்களில் பொக்கை வாய்ப் புன்னகையுடன்.

     கல்யாணமான பேத்தி சுமதியே ஒரு முறை தாயிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா இது? பாட்டிக்கு எப்பப் பார்த்தாலும் அழுகை இல்லே சிரிப்பு. வர வர அவ பேசறது எதுவுமே புரியலே. இப்படித் தானும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப் படுத்தறாளே…”

“பாட்டி ஆசை, ஆசையா செஞ்சதெல்லாம் மறந்துட்டியா? நீயே இப்படிப் பேசறியே! நாளைக்கு எனக்கே ஒண்ணுன்னாலும், இப்படித்தான் பேசுவியா?”

     கிழவிக்கு கண் பார்வை மங்கினாலும், காது கேட்கிறது.  வாழ்க்கை நிகழ்ச்சிகள் அவ்வப்போது மனத்தில் திரைப்படம் போல் வந்து போகின்றன. மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவானாலும், கண்கள் கரகரவென்று நீரைப் பொழிகின்றன
.
“விளையாட்டுச் சிறுமி கமலம் கல்யாணமாகி வீடு, தோட்டம், மாடு, கன்று என்று கட்டியாண்டது, செத்துப் போன கணவரின் கடந்தகால லீலைகளால் கடனாளியாகி, நடுத்தெருவில் நின்றது…”

     எத்தனை வீடுகளின் அடுப்படிகளைப் பார்த்து விட்டாள்?  வாழ்ந்து கெட்டதால், வார்த்தைகளையும், ஓநாய்ப் பார்வைகளையும் பொறுக்க முடியாமல் விருட்டென்று விறைத்துக் கொள்ளும் மனதை, துணி மாதிரி சுருட்டி உள்ளே திணித்துக் கொண்டு, கடமையே உயிர் மூச்சாய், மாதவனை வளர்த்து ஆளாக்கிய காலங்கள்....அந்த நினைவுகளே சுட்டெரிக்கின்றன.  கண்களின் கண்ணீர் கிழ மனதின் உஷ்ணத்தினால் சூடாகி வழிகிறது. தொண்டைக் குழியிலிருந்து ஒரு விம்மல் வெடிக்கிறது.

     ரத்னாவின் பெரியம்மா வந்திருக்கிறாள், “இதென்னடி ரத்னா, இப்படி ஒரு கஷ்டம் உனக்கு?  உன் மாமியாரைப் பார்த்தா பகீர்ங்கறது.  அரைக்கண் தூக்கமும், கனாக் கண்டு அழறதும், சிரிக்கறதும், ஒண்ணுக்கும், ரெண்டுக்குமா.. இப்பவே நீ அரை ஆளா ஆயிட்டே.  இப்படியே எவ்வளவு நாள் செய்வே? கிழவிக்கு வாழணும்கற ஆசை இன்னும் போகலே..அதான் இப்படி அல்லாடறா…”

“என்ன பெரியம்மா? நமக்கு ஆயுசு இருந்ததுன்னா, என்னதான் செய்ய முடியும்?  நடை. உடையோட இருந்துட்டு, இப்படி பாயோட படுக்கையோட உயிரோட இருக்கணும்னு, யாராவது ஆசைப் படுவாளா? என்ன பக்தி? என்ன ஆசாரம்?  எவ்வளவு சுலோகம் சொல்லுவா?  எல்லாமே போய்.....அந்த மனசு எவ்வளவு கஷ்டப்படறதோ?”

     கிழவியின் உதடுகள் மடிந்து உடம்பு குலுங்குகிறது.
“ஆமாண்டியம்மா..எனக்கு உடம்பு ஒடுங்கிடுத்து, நாக்கு புரளலே. ஆனா..மனசு சதா வேலை செய்யறதே! ஆசாபாசம் அடங்கலியே! முருகா! உன்னைக் கூட நான் மறந்து போனேனே! ‘காக்கக் காக்க கனக வேல் காக்க, பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட….” மனதின் மொழியை வெளிப்படுத்த நாக்கு மறுக்கிறது.  கன்னாபின்னாவென்று வார்த்தைகள் கொட்டுகின்றன.

     வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் ரத்னாவிடம் கேட்கிறான்,  ‘ஆன்ட்டி! இந்த  பாட்டி என்ன பேசறாங்க?  யாரையோ திட்டறமாதிரி இருக்கே?...’

‘பாட்டிக்கு யாரையும் திட்டத் தெரியாது.  ஏதாவது சுலோகம்தான் சொல்லுவாங்க …’"

‘அம்மாடி! நீயாவது என்னைப் புரிஞ்சுண்டியே….நீ நன்னா இருக்கணும்…’
பாட்டியின் இதழ்க்கடையில் சுருக்கங்கள்.

‘அதோ பார்!  பாட்டி சிரிக்கறாங்க ….’

‘பாட்டி ஏன் அழுதுண்டே சிரிக்கறாங்க?"

‘நரம்பெல்லாம் ‘வீக்’ ஆச்சுன்னா எதையுமே கட்டுப்படுத்த முடியாது.  சிரிச்சாலும் கண்ணுலே தண்ணி வரும்…."

‘இந்த பாட்டியோட பாஷையெல்லாம் இவங்களுக்கு மட்டும்தான் புரியும். நமக்கெல்லாம் புரியாது..." என்கிறாள் ரத்னாவின் பெரியம்மா.

     பாட்டிக்கு இரவும், பகலும் ஒன்றுதான். அரை மயக்க நிலையில், மனதில் தோன்றும் காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.  அன்றும் அப்படித்தான்.

     “பத்து பேர் காலில் விழுந்து மாதவனை ஒரு வேலையில் அமர்த்தியாயிற்று. ரத்னா மருமகளாகிறாள். தாயற்ற அப்பெண்ணுக்கு கமலம் பிரசவம் பார்க்கிறாள். பேத்தி சுமதி, பிறகு பேரன் மகேஷ்..அந்த வீட்டின் ஒவ்வொரு இயக்கத்திலும் கமலத்தின் பங்கு இருக்கிறது.  சுமதியின் கல்யாணத்தின்போது கமலம் ஓய ஆரம்பித்து விட்டாள்…”

     சொத்தென்று ஏதோ ஒன்று முகத்தின் மேல் விழுந்து விட்டுப் போகிறது.  கிழவி அலறிக் கொண்டே விழிக்கிறாள்.  எப்படியோ உள்ளே வந்துவிட்ட ஒரு தவளை.  குச்சியால் அதைத் தள்ளிவிட கிழவியால் முடியவில்லை.  தீனமாக அலறுகிறாள். மாதவன் விழிக்கிறான்.

“சே! என்ன தொல்லை இது? நடு ராத்திரிலே அலறல்…நாள் பூரா தூங்கிட்டு, நாம தூங்கறச்சே உயிரை வாங்கறாளே! ரத்னா! போய்ப் பாரு…”

ரத்னா வந்து தவளையைத் தள்ளி விடுகிறாள். மறு நாளே வராந்தா அளவுக்கு, ஒரு பழைய நீளப் பலகையைத் தேடிப் பிடித்து, தடுப்பாக வைத்து விட்டுப் படுக்கச் செல்கிறாள்.

      சுட்டெரிக்கும் வெயிலுக்கிடையே  பெய்த ஒரு நாள் மழையினால், சூழ்நிலை குளிர்ந்திருக்கிறது.  கிழவி சாய்ந்து அமர்ந்து, வாசலில் விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.  உள்ளே எண்ணெயில் பட்சணம் சுடும் வாசனை வருகிறது.  கிழவி வறண்ட உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறாள்.

  சற்று நேரத்தில் வந்த ரத்னா, ஒரு ஸ்பூன் காராபூந்தியை நொறுக்கி, கிழவியின் வாயில் போடுகிறாள்.  கிழவியின் கண்களில் திருப்தி.  ஜாடையில் விசாரிக்கிறாள்,  ‘என்ன விசேஷம்?”

“நாளைக்கு மகேஷுக்குப் பிறந்த நாள்…”

கிழவி கையை நீட்டுகிறாள்.  அது எதற்கு என்று ரத்னாவுக்குத் தெரியும். “இருங்கோ..” உள்ளே செல்கிறாள்.
 
  மறு நாள்.  “எனக்கு பர்த்டே பாட்டி…” வணங்கும் பேரனை ஆசீர்வதிக்கிறாள் கிழவி.  ரத்னா கொடுத்த டப்பாவிலிருந்து பேனாவையும், சாக்லேட்டுகளையும் துழாவி எடுத்து, நடுங்கும் விரல்களால் மகேஷிடம் கொடுக்கிறாள்.

“தாங்க்ஸ் பாட்டி…’ பேரன் கல்லூரிக்குக் கிளம்புகிறான்.

பாட்டியின் முகத்தில் பரவசம்.  அதைப் பார்த்து ரசிக்கிறாள் ரத்னா.  வயதானவர்கள் எதையெல்லாம் விரும்புவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

  அன்று மாதவனின் அலுவலக நண்பர்கள் வந்திருந்தார்கள்.  தொங்கும் திரைச்சீலைக்குப் பின்னால் புதுப்புது மனிதக் குரல்கள். இடையில் ‘ஸ்க்ரீன்’ விலக்கப்பட்டு, ஒரு சிறிய அறிமுகம். தொடர்ந்து உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன.

“இந்த மாதிரி படுத்த படுக்கையா நாலு நாள் கிடந்தாலே பார்த்துக்கறது கஷ்டம்.  நீங்க எல்லாரும் ‘க்ரேட்’, ஸார்…”

“மேடம்! சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.  நீங்க அவங்களுக்குப் பார்த்துப் பார்த்து ஆகாரம் கொடுக்கறீங்கன்னு ஸார் சொன்னார்.  அதெல்லாம் வேணாம்..இவங்க இன்னும் இருந்து என்ன சுகப்படப் போறாங்க?  போற உயிரைப் பிடிச்சு வெச்சுக்க வேணாம்..விட்டுடுங்க…”

  அவர்கள் சென்று விட்டார்கள்.  கையில் கஞ்சியுடன் வந்த ரத்னாவின் முகத்தில் குழப்பம்.  சற்று நேரமாகிவிட்டதால், கிழவியின் காய்ந்த உதடுகளும், நாக்கும் கஞ்சியை பரபரப்புடன் உள்வாங்கிக் கொண்டன.  ரத்னா யோசித்தாள். “எத்தனை பேருக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறிய ஜீவன்? இந்த ஜீவன் நாக்கும் பல்லும் உலர்ந்து போய், பசியால் வயிறு ஒட்டி இழுத்துக்கொண்டு, பரிதவிச்சுப் போய், அணுஅணுவா சாகறதை, நான் கண்கொண்டு பார்க்கணுமா? என்னாலே அப்படி ஒரு பாவத்தைச் செய்யவே முடியாது..கடவுளே! என் உடம்பு ஓய்ஞ்சு, மனசு சலிச்சுப் போறதுக்குள்ளே, இந்த ஜீவனுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுப்பா..”

  அன்று காலை முதல், ரத்னாவைக் காணவில்லை.  மகேஷ் பால் டம்ளரைக் கொண்டு வந்து வைக்கிறான்.  “அம்மாவுக்கு ஜுரம் பாட்டி, எழுந்திருக்க முடியலே…இதைக் குடிங்க ..நான் வாயிலே விடறேன்..காலேஜுக்கு டயமாச்சு.." 

கிழவி "வேண்டாம், நீ போ , நான் குடிப்பேன்.." என்பது போல் ஜாடை காட்டினாள் ..

  ரத்னாவுக்கு உதவ மதியம் வந்த பக்கத்து வீட்டு வேலைக்காரி கன்னியம்மா, திரைச் சீலையை விலக்கினாள். காலை மகேஷ் வைத்துச் சென்ற பால், செத்துப் போன ஈயுடன் அப்படியே இருந்தது.

“அட! நீ பாலைக் குடிக்கலியா? அம்மாவுக்குக் காய்ச்சல் நெருப்பு மாதிரி பொரியுது.  நான் கஞ்சி எடுத்தாரட்டுமா?”

“வேண்டாம்..பசியில்லை…” என்று ஜாடை காட்டினாள் கிழவி.

மாலை டாக்டர் வந்து சென்றார்.  அன்று இரவும், மகேஷ் வைத்தப் பாலை, கிழவி குடிக்கவில்லை.  மறு நாள் மாதவன் கத்தினான்.

“நீ என்ன நினைக்கறே? அவகிட்டே மட்டும்தான் செஞ்சுப்பியா?  அவ பெரிய படுக்கையா போட்டுடுவா போலேருக்கு. மகேஷ் எக்ஸாமுக்குப் படிக்கணும். உனக்கு உபசாரம் செய்ய எங்களுக்கெல்லாம் நேரம் கிடையாது தெரியுமா?”

அதற்குப் பின் இரண்டு நாட்கள் எந்த ஆகாரமும் வரவில்லை.  ஒரு வாய் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுக் கிழவி சுருண்டு கிடந்தாள்>

    மூன்றாவது நாள் காலை.  சக்தியின்றி மயங்கிக் கிடந்த கமலத்தின் வாயில், ஒரு ஸ்பூன் பால் விழுகிறது.

“அம்மா! நீங்க இப்படி செய்யலாமா?”

ரத்னாவின் குரல் கேட்டு விழித்த கிழவியின் கண்களில் அதீத பளபளப்பு. கண்ணீருடன் ‘களக்..களக்..’ என்று பாலை சிறிது விழுங்குகிறாள்.  ரத்னாவின் இரு கைகளையும் பற்றி, தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொள்கிறாள்.  திடீரென்று கிழவிக்கு சுவாசம் வேகமாக வாங்குகிறது. பதறிய ரத்னா, எல்லா தெய்வங்களையும் மாறி மாறி பெயரிட்டு அழைக்கிறாள்.

  சற்று நேரத்தில் எல்லாமே அடங்கிவிட்டது.  ரத்னாவின் நெஞ்சு பரிதவித்தது. “தூங்க முடியாம இத்தனை நாள் நீங்க தவிச்சாச்சு. இனிமே நிம்மதியா தூங்குங்கோ..”

  செய்தியறிந்த மாதவன் ஃபோனில் அலுத்துக் கொண்டான், “அட ராமா! மாசக் கடைசியாச்சே! என்ன செய்வேன் இப்போ?”

“முடிஞ்சதைக் கொண்டு வாங்கோ. பார்த்துக்கலாம்…”

  கும்பல் சேர்ந்து விட்டது.  வாசலில் நின்ற காரிலிருந்து உள்ளே வந்தவர், விசாரித்துக்கொண்டு மாதவனிடம் வந்தார்…”உங்கம்மாவைப் பார்க்கத்தான் வந்தேன்..ஐயம் ஸாரி…இதை நான் எதிர்பார்க்கலே…” தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  “என் பேர் ராமநாதன். படுத்த படுக்கையாயிட்ட எங்கம்மாவைக் கமலம்மாகிட்டே ஒப்படைச்சுட்டுத்தான் நான் ‘ஸ்டேட்ஸ்’ போனேன்.  எங்கம்மாவுக்காக கமலம்மா செய்யாத வேலையே கிடையாது. இந்த மாதிரி சேவைக்கெல்லாம், சம்பளம் கொடுத்து கணக்கு தீர்க்க முடியாது. பணம்தான் அனுப்ப முடிஞ்சுதே தவிர, எங்கம்மா ‘டெத்’துக்குக் கூட என்னாலே வர முடியலே. எங்கண்ணாதான் காரியமெல்லாம் செஞ்சார்.  அப்படிப்பட்ட புண்யாத்மாவுக்குச் செய்யற பாக்கியம், உங்களுக்குக் கிடைச்சிருக்கு, ஸார்…”

மாதவன் கண்கள் நிலத்தை நோக்கின.

“உங்கம்மா ஃபோட்டோ இருந்தா கொடுங்க..பத்திரிகைக்குக் கொடுக்கறேன்.  அதோட எனக்கும் வேணும்…” என்றவர், பர்ஸைத் திறந்து ரூபாய் நோட்டுக்களை கொத்தாக உருவி, மாதவனிடம் திணித்தார்…”என்னோட யாரையாவது அனுப்புங்க.  செலவைப் பத்தி கவலைப்படாதீங்க.  இந்த புண்ணியத்துலே எனக்கும் பங்கு கிடைக்கட்டும்…”

  பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து குவிந்த அனுதாபக் கடிதங்கள், மணியார்டர்கள், காசோலைகள்…. கமலம்மாவின் காரியங்கள் தடையின்றி நடந்தன.

  ராமநாதன் மாதவனிடம் அவனது அலுவலக வேலை, சம்பளம் ஆகிய விபரங்களை விசாரித்தார்.

“இருபது வருஷத்துக்கு மேலே ‘ஸர்விஸ்’ போட்டிருக்கீங்க.  சம்பளம் இவ்வளவு கம்மியா இருக்கே..கவலைப்படாதீங்க..நான் உங்களுக்கு இதை விட ‘பெட்டர் ஜாப்’ கிடைக்க ஏற்பாடு செய்யறேன்..மைலாப்பூர்லே எங்க பழைய வீட்டிலே ஒரு போர்ஷன் காலியாயிருக்கு..இதை விட வசதியாயிருக்கும்..நல்ல ‘ஸென்டர் ப்ளேஸ்’…நீங்க அங்கே குடி வந்துடுங்க…”

“இங்கேயெல்லாம் வாடகை கம்மி…மைலாப்பூர்னா.. நிறைய வாடகை என்னாலே கொடுக்க முடியாதே ஸார்…  மாதவன் தயங்கினான்.

“பரவாயில்லே…இப்போ நீங்க என்ன வாடகை கொடுக்கறீங்களோ, அதையே கொடுங்க… அங்கே ஒரு போர்ஷன்லே என் சித்தி இருக்காங்க.. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கலாமே?”

ராமநாதன் வாயால் கூறியவற்றையெல்லாம்,செயல்படுத்தவும் செய்தார். 
“கமலம்மாவோட ஒரே பிள்ளை நீங்க.. உங்களுக்கு என்ன செஞ்சாலும் தகும்…”

நல்ல சம்பளத்தில் வேலை,  அருமையான குடியிருப்புப் பகுதியில் வசதியான இருப்பிடம்.....அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 

 மகேஷ் அக்கா சுமதியிடம் கூறிக் கொண்டிருந்தான், “இந்த வீடு 'ஸூப்பர் லொகாலிடி'லே  அமைஞ்சிருக்குக்கா. ..அந்த அங்கிள் ரொம்ப நல்லவரா இருக்கார் இல்லே?” 

ரத்னா கூறுகிறாள், “அங்கிள் நல்லவர்தான். இதெல்லாம் அவர் செய்ய யார் காரணம் தெரியுமா?  உங்க பாட்டி…அத்தனையும் உங்க பாட்டியோட உழைப்பு, நல்ல மனசு..நமக்கு பாட்டியோட ஆசீர்வாதம் கிடைச்சிருக்கு…”

  யாரோ பெறாத பிள்ளை அணிவித்த சந்தன மாலையை அணிந்து, படத்தில் சிரித்துக் கொண்டிருந்த அம்மாவைக் கூர்ந்து நோக்கிய மாதவனின் கண்கள் பனிக்கின்றன.

“அம்மா! எனக்காக கண்ணுக்குத் தெரியாம இவ்வளவு சேர்த்து வைச்சிருக்கியேம்மா……உன் பிள்ளைன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கே… உன்னை ஒதுக்கின எனக்கும், இப்படி ஆசீர்வாதம்
பண்ணறியேம்மா…”

 தன் தாயை நினைத்து, முதன்முறையாக மாதவன் குலுங்கிக் குலுங்கி
 அழுகின்றான்.

                             --------------------------
   

              என்ன?  கதையை  படிச்சீங்களா?  கமலம்மா கண்ணுக்குத் தெரியாம சேர்த்து வைச்ச சொத்து  என்னன்னு  தெரிஞ்சுகிட்டீங்களா?  அம்மான்னா  அம்மாதான். நம்ம கூட இருந்தாலும், பிரிஞ்சு போயிட்டாலும் , அவங்க மனசும், ஆத்மாவும் எதுவுமே முடியாட்டாலும், நமக்காக  சாமியையாவது வேண்டிக்கும்.  "செத்தும் கொடுத்தான் சீதக்காதி "ன்னு ஒரு கதை  சொல்லுவாங்க. சீதக்காதியாலே  மட்டும்தான் முடியுமா?  ஒவ்வொரு அம்மாவாலேயும் கூட முடியுங்க.  அட! நேரமாச்சு.  என் குழந்தைகள் எனக்காக பசியோட காத்திட்டிருப்பாங்க.  நான் வரட்டுமா நண்பர்களே!

Saturday, 21 June 2014

A bright, prosperous future....(ஒளி மயமான எதிர்காலம்)

ஒளி மயமான எதிர்காலம் (சிறுகதை)
(எழுதியவர் – கௌரி கிருபாநிதி)
                    (ஜூலை 1999 – ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது)              
                                     ---------


       சில்லென்ற கடற்காற்றும், சித்திரா பௌர்ணமி நிலவின் தண்ணொளியும், அந்த விசாலமான மேல் மாடியை சொர்க்கமாக்கியிருந்தன.  ‘பாரத் அபார்ட்மெண்ட்ஸின்’ குடியிருப்புகள் ஏறக்குறைய காலியாகிக் கொண்டிருந்தன. ‘காஸெட்’ சங்கீதத்தினால், மேல் மாடி கலகலத்துக் கொண்டிருந்தது.  விதம் விதமான வண்ண உடைகள் சரசரத்தன.

       சற்று நேரத்தில், மாடியில் ‘மூன்லைட் டின்னர்’ அமர்க்களப் பட்டது.  ‘வாலண்டியர்’களாக மாறிய ஆண்களும், பெண்களும், ஒரு பெரிய வட்டமாக எல்லோரையும் உட்காரவைத்து, உணவு வகைகளைப் பரிமாறினர்.  பகவதியின் மலையாளப் பால் பாயசம், பார்வதியின் பிஸி பேளா, பஹாளா பாத், மைதிலியின் புளியோதரை, சிப்ஸ், ஆயிஷா செய்த குலாப் ஜாமூன், செல்வி செய்த வெஜிடபிள் புலாவ், வள்ளியின் குழாய்ப்புட்டு, மேரியின் கை வண்ணத்தில் ப்ளம் கேக், ஐஸ்க்ரீம் – இப்படி எல்லாம் பஞ்சாகப் பறந்து கொண்டிருந்தன.

“பிஸி பேளாவும், புலாவும் வாயை விட்டு நீங்கலே..”

“வள்ளி! இந்த புட்டு எப்படி செஞ்சீங்க?”

“வெண்ணிலாவும், வானும் போலே ..அடுத்தபடியா ‘ஐயங்காரும், புளியோதரையும் போலே’ன்னு பாடலாம் போலே இருக்கு..” சிலாகித்த மகாதேவனை ரகசியமாக அடக்கினாள் பார்வதி..
“காணாததை கண்டுட்ட மாதிரி ரொம்ப வழிய வேண்டாம். இதுலே என்னென்ன சேர்த்துருக்கான்னு தெரிஞ்சுண்டு நாளைக்கே பண்ணிக்காட்டறேன் பாருங்கோ..”

“மேரி! ஐஸ்க்ரீம் கட்டியா வராம, இப்படி ‘க்ரீமி’யா வர என்ன செய்யணும் சொல்லுங்களேன்..”

“ஆயிஷா! குலாப் ஜாமூன் சைஸை கொஞ்சம் குறைச்சிருக்கலாம். பிள்ளைங்க எல்லாம் இன்னொண்ணு கேக்குதுங்க..”

“நான் நிறையதான் செஞ்சிருக்கேன்.  எடுத்துக்குங்க..”

“ஆயாசம் போக்க பகவதி ஆன்ட்டியின் சூடான பாயாசம் குடிங்க..” என்று மாதவன் அபிநயிக்க, மகிழ்ந்து போன பகவதி, அவன் கோப்பையை மீண்டும் நிரப்பினாள்.

       ‘டின்னர்’ முடிந்து, துப்புரவுப் பணியில் இளசுகள் மும்முரமாக இறங்க, பத்தே நிமிடங்களில் மேல் மாடி சுத்தமாகி விட்டது.
“இனி தொடர்வது … ‘பல்சுவை நிகழ்ச்சி’, முதலில் இறை வணக்கம்.. வழங்குபவர் திவ்யா…”, தொடர்ந்து நண்டு, சிண்டுகளின் ‘ரைம்ஸ்’, ‘முஸ்தஃபா’, ‘வெண்ணிலவே’, ‘மானா மதுரை மாமரக் கிளையிலே’, ‘அகிலா அகிலா..’, இவற்றுக்கு விதம், விதமான
குதியல்கள், நெளியல்கள்..

            ஒரு மூலையில்ப்ளஸ்-டூ’  எழுதிய மாணவச் செல்வங்களின் பெற்றோர் ஒரு தனி மாநாடு நடத்தினர்.

“எல்லாம் குதியாட்டம் போடுதுங்க.  எக்ஸாம் ரிஸல்டை நெனச்சா பக்கு பக்குங்குது..”
என்றாள் வள்ளி.

“நைன்ட்டி பர்ஸென்ட் வாங்கினா கூட போறாது, நைன்ட்டி எய்ட்டாவது வாங்கணும்.. அப்பத்தான் மெடிகல், எஞ்சினியரிங் பத்தி நெனச்சாவது பார்க்க முடியும்..” இது பார்வதி.

“அண்ணா யூனிவர்ஸிடி இல்லேன்னாலும், ‘டோட்’லேயாவது மாதுவுக்குக் கிடைச்சா சரி..”

“அது மட்டும் ஈஸியா என்ன? ’பேமென்ட் ஸீட்’டுக்கே நிறைய மார்க் வாங்கணும்..”

“ராப்பகலா படிச்சாள் கொழந்தே..அவளுக்கு ‘மெடிகல்’ கெடைச்சே ஆகணும்..” இது
மேனகாவின் அம்மா பகவதி.

“எக்ஸாம் ஜுரம் இப்ப நமக்கெல்லாம் வந்துடுத்து.  நம்ம குழந்தைகள் ஒரு வழியா
‘ஸெட்டில்’ ஆனாத்தான் அது விடும்..”

       “சப்பா சப்பா சர்கா சலே..” சிறுவர்களின் கோரஸுக்கு டப்பாக்களும், தட்டுகளும், கரண்டிகளுமே தாள வாத்தியங்களாயின.  ‘இனி பொறுக்க முடியாது’ என்ற நிலை வந்ததும், சமயோசிதமாக மகாதேவன் நன்றி நவில, ‘மூன் லைட் டின்னர்’ இனிதே
நிறைவேறியது.

       கணபதி, மோனிஷ், மாதவன், சரவணன், அப்துல் பெரும்பாலும் சேர்ந்தே
சுற்றினார்கள்.  திவ்யாவும், மேனகாவும் தம் பள்ளித் தோழிகளுடன் சேர்ந்து கொண்டார்கள்.  கல்லூரிகளுக்குப் படையெடுத்து, பிடித்த கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தார்கள்.  எழுதிய தேர்வுகளையும், எதிர்காலத்தையும் பற்றி வாய் வலிக்கப் பேசினார்கள். ‘அப்ளிகேஷன்’ வாங்கப் போன சில கல்லூரி வாசல்களில், ‘ஸீனியர்’களால் ‘ராகிங்’ என்ற பெயரில் வழிப்பறி செய்யப்பட்டு, பணமிழந்தார்கள், தொப்பியிழந்தார்கள்.

“இன்னும் ரெண்டு காலேஜுக்குப் போக, கையிலே பணமில்லாம போச்சும்மா..”

“இது என்னடா அநியாயம்? வேகாத வெய்யில்லே ‘ஹாட்’டையுமா கழட்டிக் குடுப்பீங்க?”

“கேட்டா, ‘வர வருஷம் வட்டியும் முதலுமா நீங்க வசூல் செஞ்சுடுங்க’ன்னு சொல்லி சிரிக்கறாங்க ஆன்ட்டி..  ஃப்ரெண்ட்ஷிப்புக்காக சந்தா வசூலிக்கறாங்களாம்..”

       எல்லா மதிப்பெண்களும் வந்து விட்டன.  கணபதியும், மேனகாவும் ‘ஸ்கூல் டாப்பர்ஸ் லிஸ்ட்’டில் இடம் பெற்றிருந்தனர்.  மோனிஷ், மாதவன் இருவரும் எண்பதுக்கு மேல் வாங்கியிருந்தனர்.  திவ்யா, அப்துல், சரவணன் மூவரும் சுமாராக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

“பார்வதியும், பகவதியும் எங்களுக்கு ‘ஸ்பெஷல் ஸ்வீட்’ தந்தாகணும்.. கணபதி! மேனகா!  நீங்க டாக்டரானதும், எங்களுக்கெல்லாம் ஃபீஸை குறைச்சுப்பேளோன்னோ?” என்றாள் மைதிலி.

“மாதவன்தான் ‘என்ட்ரன்ஸ்’லே நிறைய வாங்கிட்டானே! அவனுக்குக் கண்டிப்பா ‘எஞ்சினியரிங் ஸீட்’ கெடைச்சுடும்..” என்றாள் பார்வதி.

“சே! இந்த மோனிஷ் கொஞ்சம் விளையாட்டைக் குறைச்சிட்டிருக்கலாம். ‘கட் ஆஃப் மார்க்ஸ்’ ‘ஃப்ரீ ஸீட்’டுக்குப் பத்தாது..” என்றாள் மேரி.

“எங்க திவ்யா அந்த கஷ்டமெல்லாம் குடுக்கலே.  அவளுக்கு ‘காலேஜ் அட்மிஷன்’ கெடைச்சாலே போதும்..” என்றாள் பார்வதி.  கணபதியும், திவ்யாவும் இரட்டைக் குழந்தைகள்.

ஆயிஷாவும், வள்ளியும் மௌனமாக இருந்தனர்.  கேட்டதற்கு ஆயிஷா சொன்னாள்.

“இந்த அப்துலும், சரவணனும் சொல்லிக்கும்படியாவா மார்க்கு வாங்கியிருக்குதுங்க?”

       மருத்துவம், பொறியியல் இரண்டு நுழைவுத் தேர்வுகளும் எழுதியிருந்த கணபதிக்கு, பொறியியலில் இடம் கிடைத்தும், அவன் மறுத்து விட்டான்.  மருத்துவத்தில் சேர ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களில் ஒன்று குறைந்து விட்டதால், இடம் கிடைக்கவில்லை.

“எனக்கு ‘மெடிகல்’லேதான் ‘இன்ட்ரஸ்ட்’, ஆன்ட்டி.. எல்லா இடத்துலேயும் ‘ட்ரை’ பண்றேன்.. ஏதாவது கிடைக்காதா?” என்றான் கணபதி.

“உனக்குக் கிடைக்கலேன்னா, ஆருக்கு கிடைக்கும், கொழந்தே?” என்றாள் பகவதி.

       “பாரத் அபார்ட்மென்ட்ஸ்” பெற்றோர்களின் மனதில், மகிழ்ச்சி போய், மன உளைச்சல் குடியேறியது.  முதலில் ஏதாவது கல்லூரியில் சேர்த்து விட்டு, பிறகு ஏதாவது கிடைத்தால் மாற்றி விடலாம் என்று முடிவெடுத்தனர்.  எல்லோரும் சேர விரும்பும், நகரின் பிரபலமான கல்லூரிகளிலிருந்து ஒருவருக்கும் அழைப்பு வரவில்லை.  ஒரு நாள் சரவணன் சொன்னான்,

“எனக்கு காலேஜ் ஸீட் கிடைச்சிடுச்சு, ஆன்ட்டி..
எல்லோரும் அவனைப் பார்த்த பார்வையில், ‘எப்படி’ என்ற ஆச்சரியக் கேள்வி.

“’பாக்வர்ட் கம்யூனிடி கோட்டா’லே..”

சரவணன் அகன்றதும், அங்கு வந்த மேரி சொன்னாள்,

“இவங்க ‘பாக்வர்ட் கம்யூனிடி’ன்னு இத்தினி நாள் நமக்குத் தெரியாதில்லே?”

“வள்ளி புருஷனுக்கு துபாய்லே எக்கச்சக்க சம்பாத்தியம்.  அவ கட்டறதெல்லாம் ‘ஃபாரின் ஸாரி’தான்.. இந்த ‘ஃப்ளாட்’ தவிர, சொந்த ஊர்லேயும் அவங்களுக்கு ஒரு வீடு இருக்கு.. சரவணன் எப்பவுமே ஒரு இளவரசன் மாதிரி ‘ட்ரெஸ்’ பண்ணறான்.. ‘ஃபினான்ஷியலா’ இவ்வளவு ‘ஃபார்வார்டா’ இருக்கறவாளுக்கு, ‘பாக்வர்ட்’னு சாதி அடிப்படையிலே சலுகை..ஹூம்..” என்று நெடுமூச்செறிந்தாள் பார்வதி.

“மாதவன், மோனிஷ், திவ்யா எல்லாருமே இவனை விட நிறைய மார்க் வாங்கியிருக்காங்க.. ஒருத்தருக்கும் இது வரைக்கும் வரலியே..”

“மாதவனுக்கு ‘பேமென்ட் ஸீட்’டாவது கிடைக்கும், சேர்ப்பீங்க இல்லே?” என்றாள் மேரி.

“அவன் ஒரே பிள்ளையில்லையே! ரமா கல்யாணத்துக்கு ரெடியா நிக்கறாளே!  அவளை எம்.எஸ்ஸி. படிக்க வெச்சாச்சு.  கொஞ்சம் நல்ல இடமா பார்க்கணும்னா, கையிலே கணிசமா வேண்டாமா?”

“நாமெல்லாம் இந்த ‘ஃப்ளாட்’ வாங்கின கடனையே இன்னும் அடைச்ச பாடில்லையே!” அங்கலாய்த்தாள் பார்வதி.

“எண்ணி எண்ணி செலவு செய்யறோம்.. ரேஷன் கடைக்கு எல்லாரும்தான் படையெடுத்து, சாமான் வாங்கறோம்.. எல்லாத்துக்கும் க்யூவிலே நிக்கறோம்.. நம்ம தலையிலே ஏதாவது கிரீடம் இருக்கா என்ன?  பகவான் நம்மளை எந்த விதத்துலே உசத்தியா வெச்சிருக்கார்னு எனக்குப் புரியலே..” என்றாள் பகவதி.

“பழைய தலைமுறை செஞ்ச தப்புக்கு, இந்த தலைமுறை கஷ்டப்படுது.. நம்ம பிள்ளைங்களுக்கு ‘தீண்டாமை’ன்னா என்னன்னு தெரியுமா? என்றாள் மேரி.

       செலவினங்களை சமாளிக்க சிறு குழந்தைகளுக்கு ‘ட்யூஷன்’ எடுக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்தாள் மைதிலி.  ஒரு நாள் குழந்தை அருணா தமிழ் படித்துக் கொண்டிருந்தாள்..

“காந்திஜி தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார்..”

“தீண்டாமை’ன்னா என்ன ஆன்ட்டி?”, அருகிலிருந்த மோனிஷ் அன்று கேட்டது, மைதிலியின் நினைவுக்கு வந்தது.


“அந்தக் காலத்துலே உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதின்னு பிரிச்சு வெச்சிருந்தாங்க.  தாழ்ந்த ஜாதிக்காரங்களை இவங்க எதுக்கும் சேர்த்துக்க மாட்டாங்க.. ஒரே குளத்துலே குளிக்க விட மாட்டாங்க. கிணத்துலே தண்ணி எடுக்கக் கூட விட மாட்டாங்க.. கோயில்லே எல்லாம் உள்ளே விட மாட்டாங்க.. பெரிய ஜமீன்தார்கள், இவங்களை கொத்தடிமை மாதிரி நடத்தினாங்க..’படிப்பு முக்கியம்’னு இவங்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலே.. நிறைய தலைவர்கள் பாடுபட்டு, இதையெல்லாம் மாத்தினாங்க..”

“இப்ப அப்படியெல்லாம் கிடையாதுதானே? யார் வேணும்னாலும் படிக்கலாம். குளிச்சு, ‘நீட்’டா ‘ட்ரெஸ்’ செஞ்சுகிட்டு, யார் வேணும்னாலும் கோயிலுக்குப் போகலாம்தானே?”

“முக்காவாசி அப்படித்தான்.  எங்கேயாவது மூலைலே இருக்கற சில கிராமங்களிலே, சிலர் இன்னும் மாறாம இருக்காங்க..”

       இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மாதவன் கேட்டான்..

“அந்த மாதிரி மாறாதவாளை தேடிப் புடிச்சு, பெரியவா திருத்தட்டுமே!  எங்களை ஏன் ‘பனிஷ்’ பண்ணணும்? நானும், சரவணனும் எத்தனை நாள் டிபன் பாக்ஸை மாத்திண்டிருக்கோம் தெரியுமா?  ஜாதியைப் பத்தியெல்லாம் நாங்க நெனச்சேப் பார்த்ததில்லே.  அவா நம்மளை விட பணக்காரா. அவாளை தாழ்ந்த ஜாதின்னு எதை வெச்சு முடிவு பண்ணறா?  இந்தியாவை மதச் சார்பற்றதுன்னு சொன்னா போறுமா? ‘ஜாதி என்ன’ன்னுதானே முதல்லே கேக்கறா? ‘எல்லாரும் இந்தியத் தாயின் மக்கள்’னா, ‘ஜாதி ஸர்டிஃபிகேட்’ எதுக்கும்மா?”

”குழந்தைகளிலே எது நோஞ்சானா, சீக்காளியா இருக்கோ, அதைத்தானே அம்மா இடுப்பிலே தூக்கி வெச்சுப்பா?”

“உண்மையாவே ‘வீக்’கா இருக்கற குழந்தையை தூக்கி வெச்சுக்கட்டும்.  ஜாதி அடிப்படைலே சலுகை கொடுத்து, ஒரு குறையுமில்லாம புஷ்டியா இருக்கற சோம்பேறிக் குழந்தைகளைக் கூட இந்த அம்மா தூக்கி வெச்சுண்டு, ரேஸ்லே முன்னாலே வந்த எங்களை ஒதுக்கி வெக்கறாளே, இது என்ன நியாயம்?”..

“ஸ்.. வள்ளி ஆன்ட்டி கேட்டா தப்பா நினைச்சுக்கப் போறா.. போய் டிபன் சாப்பிடு..” என்று மாதவனை அனுப்பி விட்டு, ட்யூஷனைத் தொடர்ந்தாள் மைதிலி.  மகன் பேச்சில் இருந்த நியாயம், அவள் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.

”யாரோ படுத்தி வெச்சா.  யாரோ கஷ்டப்பட்டா.  படுத்தி வெச்சவாளும், பாடுபட்டவாளும், தண்டனையோ, சலுகையோ கிடைக்காம போய் சேர்ந்தாச்சு.  பல வருஷத்துக்கு முன்னாலே, தென்னை மரத்துலே தேள் கொட்டித்து.  இப்போ வளர்ந்து நிக்கற பனை மரத்துலே நெறி கட்டறது..”  வருத்தத்திலும், சிரிப்பு வந்தது மைதிலிக்கு.

       சில நாட்களில், மோனிஷுக்கு நகரின் பெரிய கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்து விட்டது.  மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள், “அவங்க மதத்தைச் சேர்ந்தவங்களுக்கு அங்கே ‘ப்ரையாரிடி’ கொடுக்கறாங்க…”

எல்லா பல்கலைக் கழகங்களும் கைவிட்ட நிலையில், ஒரு வெளியூர் பல்கலைக் கழகத்திலிருந்து, கணபதிக்கும், மேனகாவுக்கும் நேர்முகத் தேர்வுக் கடிதம் வந்தது.  உற்சாகத்துடன் கிளம்பியவர்கள், தொங்கிய முகத்துடன் திரும்பினார்கள்.  கிருஷ்ணன் குட்டி சொன்னார், “இது கிடைக்கணும்னா, ஒரு லட்சம் சொர்ண புஷ்பம் வைக்கணுமாம்..”

“ஆயிரக்கணக்கா ‘அப்ளை’ பண்றவாளை, ‘வேணாம், இது வேஸ்ட்’டுன்னு தடுக்கணும் போலேயிருக்கு..” என்றார் மகாதேவன் ஆத்திரமாக.

“இருக்கறவா குடுக்கறா.  நாம தடுத்தா எல்லாரும் கேட்டுடுவாளா?” என்றார் ராகவன்.

“இனிமே வைத்தியம் பண்ணிக்கணும்னா, கிழ டாக்டராதான் தேடணும்.. ஏன்னா, சின்னவாள்ளே, உண்மையாவே திறமையாலே முன்னுக்கு வந்தவா யாருன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?” என்றாள் பார்வதி.

       அப்துலும் ஒரு கல்லூரியில் சேர்ந்து விட்டான்.  இப்ராஹிம் சொன்னார்’ “சிபாரிசுங்க.  அங்கே நம்ம மனுஷங்க இருக்காங்க.  அப்படியும், இங்கே அங்கே திரட்டிக் கொடுத்துத்தான் சேர்த்தோம்.  பையன் செய்யப் போறது நம்ம வியாபாரம்தான்னாலும், படிப்பு போதும்னு விட்டுட முடியுங்களா?”

“பாவம். மேனகா, கணபதிக்கு இங்கே ஒரு காலேஜ்லேயிருந்து ‘இன்டர்வியூ’வுக்கு வந்தப்ப, அவங்க வெளியூருக்குப் போயிட்டாங்க.  அதுவும் கிடைக்கலே, இதுவும் போச்சு.. அவங்க சில காலேஜுக்குத்தான் ‘அப்ளை’ செஞ்சாங்க..”

       ‘பாரத் அபார்ட்மென்ட்’ஸில் வரவர கலகலப்பு குறைந்தது.  முகங்களில் இறுக்கம். ‘மூன்லைட் டின்னரில்’ மகிழ்ச்சியில் பளபளத்த கண்களில் ஏக்கம், அநுதாபம், பொறாமை, அசூயை, அலட்சியம், இன்னும் ஏதேதோ உணர்ச்சிகள்..

“நான் பெரிய ந்யூரோ ஸர்ஜனாகணும்..” என்று கணபதி சொன்னபோது, “குட். லட்சியத்தை விட்டுடாதே..” என்று வாழ்த்திய வாய்கள், இன்று விமரிசிக்க ஆரம்பித்தன.

“கிடைச்ச ஸீட்டையும் விட்டுட்டே.  எல்லா காலேஜுக்குமாவது அப்ளை செஞ்சிருக்கலாம் இல்லே?”

கணபதியின் இலட்சியத்துக்கு ‘அசட்டுப் பிடிவாதம்’ என்று பெயர் சூட்டப் பட்டது.  அந்தக் காலனியின் தலை சிறந்த மாணவனும், மாணவியும் குற்ற உணர்வினால் குறுக ஆரம்பித்தனர்.

       மேனகாவுக்கு ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தது. விரும்பிய பிரிவு கிடைக்கவில்லை.  திவ்யா தபால் மூலம் படிக்க முடிவு செய்தாள்’ தையலும் கற்க ஆரம்பித்தாள்.

       ஒரு நாள். ஒரு கல்லூரி முதல்வரை விடாப் பிடியாய் போய் பார்த்தனர் கணபதியும், மாதவனும்.  முதல்வர் கேட்டார்..

“இட்ஸ் டூ லேட்.  உங்களுக்கு நான் எந்த அடிப்படைலே ஸீட் கொடுக்க முடியும்?”

“மோஸ்ட் பாக்வர்ட் கம்யூனிடி’ங்கற அடிப்படைலே கொடுங்க ஸார்..”

முதல்வரின் நெற்றி சுருங்கியது…”வாட் டூ யூ மீன்?”

“யெஸ்.  நாங்க லட்சம் லட்சமா பணத்தைக் கொடுக்க முடியாத, முற்பட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க.. அதாவது, இன்னிக்கு மிகவும் பிற்படுத்தப் பட்டுள்ள சந்தர்ப்ப ஏழைகள் நாங்க.. தகுதி இருந்தும், விரும்பினது கிடைக்காம, கிடைக்கறதை விரும்ப வேண்டிய கட்டாயத்திலே இருக்கறவங்க..”

       முதல்வர் அவர்களை உற்று நோக்கினார்.  விரக்தியில் கனன்ற அக் கண்களில், அக்கினிக் குஞ்சின் சிறு பொறிகள், அவர் கண்களுக்குப் புலப்பட்டன.

         வெளியில் வந்த கணபதியும், மாதவனும் பேசிக்கொண்டனர், “நாம எஜுகேஷனல் லோனுக்கு அப்ளை செஞ்சு, பேமென்ட் ஸீட்லேயாவது கிடைச்ச காலேஜ்லே சேர்ந்துடணும்…..நம்மளை ஸ்டூடென்டா அடையறதுக்கு இந்த காலேஜுக்கெல்லாம் கொடுத்து வைக்கலே..அவ்வளவுதான்…” சிரித்தனர்.

“படிப்பு முடிஞ்சதும் எப்படியாவது வேலை பார்த்து கடனை அடைச்சுடறோம்னு சொன்னா, அப்பா ஏற்பாடு செய்வார்…” மாதவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர், அருகில் இருந்தவரிடம் சொன்னார், “இந்த காலத்துப் பசங்க ரொம்ப புத்திசாலிங்க.. ஆனா, சில பேருக்கு ஏமாத்தங்களை தாங்கற சக்தியில்லே. வாழ்க்கையே பறிபோயிட்ட மாதிரி, குழம்பிப் போய், தப்பு தப்பா முடிவு எடுக்கறாங்க.  இந்தப் பசங்க மாதிரி தெளிவோட யோசிச்சா, வாழ்க்கையிலே பிரமாதமா முன்னுக்கு வந்துடுவாங்க..  க்யூவிலே நிக்கறவங்களுக்கு, காஃபி, டீ ஊத்திக் கொடுக்கறவன் கூட சந்தோஷமா பிழைக்கறான்.  சந்தோஷமா வாழ வழியா இல்லே?...”

“வாழ்த்துக்கள் தம்பிகளா!  நீங்க ரொம்ப நல்லா வருவீங்க..” வாயார வாழ்த்தினார்.  அவரை வணங்கிய கணபதி, மாதவன் கண்களில் பிரகாசமான ஒளி தென்பட்டது.


                                      --------------------------------------------

Hello friends, Deservant students sometimes face disappointment, because they are deprived of opportunities they seek, due to various reasons.  It doesn't necessarily mean that they are deprived of a bright, prosperous future too!  When some doors are closed, so many other doors are open for them.  Using their intelligence, they have to make use of the opportunities which are open for them and come out successful.

Hello youngsters! A very bright, prosperous future is awaiting you!   All the very best!


                                



                

Sunday, 18 May 2014

Hello Mr./Ms. Loudspeaker! (Short story)

Hello friends!  In our life,  we are meeting so many people.  Some people don't know how to behave or speak in public places.  They are not aware of the consequences.  They won't pay heed to advices.  Noone else can mend them.  They will learn by their own experiences.  How?  The answer is available in my short story, "Hello Mr./Ms. Loudspeaker!"

HELLO MR./MS. LOUDSPEAKER!  (Short story)

It was a busy Monday morning.  The travellers in the bus felt the bus was moving at snail's pace.  Crowd, perspiration, impatience... Mr. Murugan didn't care about all this.  He was going on talking with his friend in a voluminous voice.  His conversation covered so many subjects,..his family, friends, office, politics, his likes and dislikes, future plans and so on...  His friend was just listening to him, nodding his head now and then, as he was not offered much time to talk.

At last, when Mr. Murugan was about to get down from the bus, he invited his friend, "Ravi!  You have not visited our new house.  Next week, we are leaving for Salem.  Visit us after 10 days.  Remember my address..no. 10, New Street, near Selva Vinayagar Temple..Don't forget!..."  Along with the bus, his speech also came to a halt.

Next week, the house at no. 10, New Street was in a great chaos.  Police personnel, sniffer dogs..Our hero, Mr. Murugan was shouting and crying alternatively.  "So many are here.  I don't know why these damn burglars have chosen my house.  I have lost almost everything.  Please help me, sir!  The culprits should be  nabbed as early as possible, dipped in the drainage and put in the prison for life time..."

"Okey, okey..", the police inspector patted him, "now tell me who were all the persons who knew about your Salem trip?.."

Mrs. Murugan stopped her crying and answered this question instantaneously in a desperate voice,  "Who knows?  The whole city,..or even the whole world might have known about our trip...".


                                                                   -----------------